மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கீழே விழுந்து காயம்: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, திடீரென கால் தடுக்கி
புதுதில்லி: மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தார்.
இதில், அவரது இடது காலில் லேசான காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவரை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார். அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.