விருத்தாசலம் அருகே பள்ளி வேன் மோதி மாணவி பலி: உறவினர்கள் சாலை மறியல்!
விருத்தாசலம் அருகே பள்ளி வேன் மோதியதில் 9-ஆம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள்
அரசுக்குழி: விருத்தாசலம் அருகே பள்ளி வேன் மோதியதில் 9-ஆம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டித்து அவரது உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கென்னடி மகள் காவ்யா (எ) சிவரஞ்சனி(14). இவர் சி.கீரணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை அரசக்குழி பஸ் நிறுத்தத்தில் சாலையை கடக்க நின்றபோது தனியார் பள்ளி வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் நின்ற கல்லூரி மாணவிகளான நந்தினி, காமி 2 மாணவிகள் காயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் அதே ஊரைச் சேர்ந்த பாரி என்பவரின் மகள்கள். காயமடைந்த கல்லூரி மாணவிகள் 2 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.