முகப்பு
இந்தியா

கேரள முதல்வர் தலைக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் கைது

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ரூ. 1 கோடி பரிசளிப்பதாக அறிவித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் குந்தன் சந்திராவத் கைது செய்யப்பட்டார்.

இந்தியா

கேரள முதல்வர் தலைக்கு ரூ. 1 கோடி பரிசு அறிவித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் கைது

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ரூ. 1 கோடி பரிசளிப்பதாக அறிவித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் குந்தன் சந்திராவத் கைது செய்யப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:20 AM
பகிர்:

கேரள முதல்வர் பினராயி விஜயனின் தலைக்கு ரூ. 1 கோடி பரிசளிப்பதாக அறிவித்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் குந்தன் சந்திராவத் கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் விளம்பரப் பிரிவு கூடுதல் தலைவராக இருந்தவர் குந்தன் சந்திராவத்.
இவர், கேரளத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன்தான் காரணம் என்று அண்மையில் குற்றம்சாட்டினார். மேலும், பினராயி விஜயனைக் கொன்று அவரது தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்த குந்தன் சந்திராவத், தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார். தொடர்ந்து, அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனிடையே, சந்திராவத் மீது மாதவ் நகர் போலீஸார் கடந்த 2-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, அவர் உஜ்ஜைனில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர் வர்மா கூறுகையில், 'தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குந்தன் சந்திராவத் ஆஜர்படுத்தப்பட்டார்; அவரை 14 நாட்கள் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →