பாபர் மசூதி வழக்கு: முக்கிய சாட்சி மரணம்
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபர் மரணமடைந்தார்.
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபர் மரணமடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு சிலரால் இடிக்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் முக்கிய சாட்சியாக ஃபைஸாபாதைச் சேர்ந்த முகமது அஸ்லாம் அன்சாரி இருந்து வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்தார்.