80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேண்டாம் ஆதார் அட்டை: சொல்கிறது மத்திய அரசு!
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேண்டாம் ஆதார் அட்டை: சொல்கிறது மத்திய அரசு!
80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுதில்லி 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி ஆதார் அட்டை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவு எல்லைப்புற மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், மேகாலயா மற்றும் அசாம் மக்களுக்கு முழுமையாக பொருந்தாது.
மேலும் நாட்டின் பிற பகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவானத்து ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
அத்துடன் இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.