இந்தியா

நீட் : உள்ளாடையை அகற்ற சொன்னது குறித்து சிபிஎஸ்இ-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

DIN


புது தில்லி: நீட் தேர்வின் போது, கேரள மாநிலம் கன்னூரில் மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்னது குறித்து விளக்கம் அளிக்குமாறு சிபிஎஸ்இ தலைவருக்கு மனித உரிமைகள் ஆனையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தில்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைவர் இது குறித்து 4 வார காலத்துக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வை நடத்திய அதிகாரிகளே சோதனையில் ஈடுபட்டதாக சிபிஎஸ்இ விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வின் போது, ஆடைக் கட்டுப்பாடு என்று கூறி, மாணவ, மாணவிகள் கடும் கெடுபிடிக்கு ஆளானார்கள். இதில் கேரள மாநிலம் கன்னூரில் ஒரு மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு தேர்தல் அதிகாரிகள் கூறியிருந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT