பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி வீட்டில் வருமானவரித் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
குமாரசாமி மீது பண மோசடி செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை முதல் பெங்களூருவில் உள்ள குமாரசாமியின் வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானவரித்துறை சோதனை குறித்து தகவல் வெளியானதை அடுத்து குமாரசாமியின் வீட்டிற்கு முன்பு தொண்டர்கள் கூடியுள்ளதால் பரபரப்பு நிலவி உள்ளது.