இந்தியா

24 மணி நேரத்தில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; ஒருவன் உயிருடன் பிடிப்பு

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பூரில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது உட்பட கடந்த 24 மணி நேரத்தில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டு, அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்திய எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பூர் பகுதியில், சந்தேகத்துக்கு இடமான நடமாட்டம் இருப்பதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 ஊடுருவல்காரர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து அவ்விடத்தில் நடந்த சோதனையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவன் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT