ஆந்திராவில் சம்பவம்: சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்து தரைமட்டமான கட்டடம் (விடியோ)
ஆந்திர மாநிலம் குண்டூரில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்த குடியிருப்புக் கட்டடம் ஒன்று, எதிர்பாராதவிதமாக விழுந்து தரைமட்டமானது.
ஆந்திர மாநிலம் குண்டூரில் பராமரிப்புப் பணிகள் நடந்து வந்த குடியிருப்புக் கட்டடம் ஒன்று, எதிர்பாராதவிதமாக விழுந்து தரைமட்டமானது.
கட்டடத்தின் கீழ்ப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கழிவுநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்த போது, யாரும் எதிர்பாராத வகையில் இந்த சம்பவம் நடந்தது.
தரைதளம் மற்றும் இரண்டு அடுக்கு மாடிகளைக் கொண்ட இந்த கட்டடம் சில நொடிகளில், பக்கத்தில் இருந்த காலி மனையில் விழுந்து தரைமட்டமானது.
Advertisement
பராமரிப்புப் பணிகளுக்காக, இந்த கட்டடத்தில் வசித்து வந்தவர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டதால், இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கட்டடம் இடிந்து விழுந்த விடியோ வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.