இந்தியா

குடிபோதையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவர்கள்: விமான பணிப்பெண் அளித்த தண்டனை என்ன தெரியுமா? (விடியோ இணைப்பு)  

DIN

ஐதராபாத்: குடிபோதையில் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாணவரை விமான பணிப் பெண் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமான நிறுவன பணிப் பெண் ஒருவர் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு குடிபோதையில் இருந்த இரு இளைஞர்கள் அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்பெண்ணின் உதவிக்குரல் கேட்டு அங்கு வந்த விமான நிலைய பாதுகாப்பு போலீசார் அவ்விரு  இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் இருவரும் அப்பெனிடம் தொடர்ந்து மன்னிப்பு   கோரினர். அவர்களின் நடத்தையால் கோபத்துடன் காணப்பட்ட அந்தப்பெண், அவ்விரு இளைஞர்களையும் தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வலியுறுத்தினார்.

பின்னர் காவல் நிலையத்தில் மாணவர் அந்த விமான பணிப்பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்.ஆனால் இளைஞர்கள் இருவரும் மாணவர்கள் என்பதால் அவர்கள் மீது அந்தப் பெண் போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை. 

இருந்த போதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த புகாரில் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விடியோ: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT