இந்தியா

ஒடிஸா ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி

DIN

ஒடிஸா மாநில ஆளுநர் எஸ்.சி.ஜமீருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வியாழக்கிழமை காலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. அதையடுத்து, புவனேசுவரத்தில் உள்ள தனியார் மருத்துவனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"எஸ்.சி.ஜமீர் நலமுடன் இருக்கிறார். அவருடைய உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனினும், அவருக்கு மருத்துவக் கண்காணிப்பு தேவைப்படுகிறது' என்று இதயநோய் சிகிச்சை நிபுணர் பி.கே.சாஹு கூறினார்.
ஜமீர் இதற்கு முன்பு, மாகாரஷ்டிரம், குஜராத் மற்றும் கோவா மாநில ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். 
மேலும், நாகாலந்து மாநில முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT