இந்தியா

மெர்சல் படத்தில் தலையிட்டு தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கம் செய்ய வேண்டாம்: ராகுல் டிவீட்

DIN


புது தில்லி: மெர்சல் படத்தில் தலையிட்டு தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கம் செய்ய வேண்டாம் என்று பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிட்டு ராகுல் டிவீட் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மெர்சல் படத்துக்கு தனது ஆதரவை தெரிவித்து இன்று டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை டிவீட் செய்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான மெர்சல் படத்துக்கு பாஜக தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராகுல் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
 

மெர்சல் படத்தில் வரும் காரசாரமான வசனங்களுக்கு, மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள் கடும் விமரிசனங்களை முன் வைத்துள்ளனர். ஒரு படி மேலே போய், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சில காட்சிகளை நீக்காவிட்டால் வழக்குத் தொடரப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழி ஆழத்தின் வெளிப்பாடு. எனவே, மெர்சல் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் தமிழர்களின் பெருமையை மதிப்பிழக்கம் செய்ய வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT