இந்தியா

பாஜக எம்எல்ஏ வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியவன் காவல்துறையிடம் இருந்து தப்பி ஓட்டம்!

DIN

கடந்த செப்டம்பர் 20-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஃபிரோஸாபாத் மாவட்டத்தின் எம்எல்ஏ மணீஷ் அஸிஜா வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினான்.

இதையடுத்து துரித நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியவனை கைது செய்தது. அவன் பெயர் அணூப் ஷர்மா என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், அணூப் ஷர்மாவை மருத்துவப் பரிசோதனைக்காக காவல்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

அப்போது, பாதுகாப்புக்கு உடன் வந்த போலீஸாரை தாக்கிவிட்டு குற்றவாளி அணூப் ஷர்மா தப்பி ஓடிவிட்டான். காயமடைந்த போலீஸாருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அணூப் ஷர்மா மீதான தேடுதல் வேட்டையை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT