பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு அளித்து வந்த பாதுகாப்பு படையினர் திரும்பப்பெறப்பட்டதாக லாலு மனைவி ராப்ரி தேவி குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
எங்கள் வீட்டுக்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்களை எவ்வித முன் அறிவிப்புமின்றி பிகார் அரசு அவசரமாக திரும்பப்பெற்றுள்ளது. எங்கள் குடும்பத்துக்கு ஏதாவது நடந்தால் அதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தான் முழுப் பொறுப்பு. இது பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சுஷில் மோடி ஆகியோரது அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பிகார் மாநில ஏடிஜிபி எஸ்.கே.சிங்கல் கூறுகையில்,
லாலு பிரசாத் யாதவ் குடும்பத்துக்கும் அவரது வீட்டுக்கும் வழக்கம் போல் பாதுகாப்பு பணிகள் தொடர்கின்றன. இதில் ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதீப் யாதவ் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தவில்லை. அவர்களது பாதுகாப்பு வீரர்கள் அதேபோன்று தொடர்கின்றனர். இதில் ஒருவர் கூட திரும்பப்பெறப்படவில்லை அல்லது நீக்கப்படவில்லை. எனவே இவ்விகாரம் தொடர்பாக யாரும் எந்த குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் முன்வைக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.