+2 வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வால் முடிவுகள் வெளியீடு தாமதமாகாது: சிபிஎஸ்இ
பனிரெண்டாம் வகுப்பு பொருளாதாரப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
புது தில்லி: பனிரெண்டாம் வகுப்பு பொருளாதாரப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகள் குறித்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும், விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு முடிவுகள் வெளியாவது, தாமதமாவதைத் தவிர்க்கும் வகையில் விடைத்தாள்களை திருத்த தேவையான அளவுக்கு ஆசிரியர்களை அனுப்புமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Advertisement