இந்தியா

ஒடிஷா மாநில கடற்கரையில் உயர்ந்து நின்ற கருணாநிதியின் புகழ் 

செவ்வாயன்று மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெரிய மணல் சிற்பம் ஒன்றினை, ஒடிஷா மாநில கடற்கரையில் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

DIN

பூரி: செவ்வாயன்று மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெரிய மணல் சிற்பம் ஒன்றினை, ஒடிஷா மாநில கடற்கரையில் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். புதனன்று சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு பெருமளவில் திரண்டு வந்து   அஞ்சலி  செலுத்தினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதியின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பெரிய மணல் சிற்பம் ஒன்றினை, புதனன்று ஒடிஷா மாநில கடற்கரையில் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்தவர் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இவர் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். அவ்வப்போது நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்து, உலகப்  புகழ்பெற்ற பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை உருவாக்குவது இவரின் சிறப்பம்சமாகும். இதன்வழியே இவர் உலகப் புகழ் பெற்றுள்ளார்.

அந்த வகையில் முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவரான கருணாநிதியின் மறைவையொட்டி பூரி கடற்கரையில் அவரின் உருவத்தை மணல் சிற்பமாக சுதர்சன் தற்பொழுது உருவாக்கியுள்ளார். அந்த சிற்பத்திதில் 1924 - 2018-ம் ஆண்டைக் குறிப்பிட்டு, ஜாம்பவான் கருணாநிதிக்கு அஞ்சலி என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

தமிழகம் தாண்டி வெளிமாநிலமொன்றின் கடற்கரையில் கருணாநிதிக்கான அஞ்சலி இவ்வாறு செலுத்தப்படுவது அக்கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜீத் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவி?

துடரும் கூட்டணி! புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன் லால்!

முதல் டி20: ஆடம் ஸாம்பா அபார பந்துவீச்சு; ஆஸி.க்கு 169 ரன்கள் இலக்கு!

ஆன்லைனில் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

மத்திய பட்ஜெட்! அதிக முறை தாக்கல் செய்தவரும் மிகச் சிறிய பட்ஜெட்டும்!

SCROLL FOR NEXT