கோப்புப்படம் 
இந்தியா

என்ஆர்சி விவகாரத்தில் ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்: அமித்ஷா

என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

என்ஆர்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். 

அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் வரைவுப் பதிவேடு(என்ஆர்சி) கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது. இதில், 40 லட்சம் பெயர்கள் விடுபட்டது. இதற்கு மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். 

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இதுதொடர்பாக மேற்கு வங்க கூட்டத்தில் பேசியதாவது, 

"உங்களுடைய(மம்தா பானர்ஜி) எதிர்ப்பால் என்ஆர்சி நிறுத்தப்படாது. உங்களுக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் சட்ட முறைப்படி, அஸ்ஸாமில் ஊடுருவியவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடிக்க என்ஆர்சியை செய்து முடிப்பது எங்களது கடமையாகும். 

என்ஆர்சி பணிகள் அஸ்ஸாம் உடன்படிக்கைபடி நடக்கிறது. அஸ்ஸாம் உடன்படிக்கையை கொண்டு வந்தது யார்? 1985-இல் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி தான் கொண்டு வந்தார். காங்கிரஸ் கட்சிக்கு அப்போது பிரச்னை இல்லை. ஆனால், வாக்கு வங்கிக்காக தற்போது அது பிரச்னையாக உள்ளது. இதில், ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

SCROLL FOR NEXT