வாஜ்பாய் மறைவு: குடியரசுத் தலைவர் ராம்நாத் இரங்கல்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் வியாழக்கிழமை மாலை 5.05 மணிக்கு காலமானார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாஜ்பாய் மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமரும், உண்மையான இந்திய அரசியல்வாதியுமான அடல் பிஹாரி வாஜ்பாயின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய தலைமைப் பண்பு, தொலைநோக்கு பார்வை, முதிர்ச்சி, பேச்சுத் திறன் அவரை தன்னிகரற்றவராக நிறுத்தியது. அடல்ஜி எனும் மாபெரும் மனிதரின் இல்லா குறையை அனைவரும் உணருவார்கள்" என்றார்.