இந்தியா

வாஜ்பாய் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடி பேத்தி நிஹாரிகாவிடம் ஒப்படைப்பு

DIN


புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடி அவரது பேத்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதிச் சடங்குகள் தொடங்க உள்ளதை முன்னிட்டு, வாஜ்பாய் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை எடுத்த முப்படை வீரர்கள், அதனை அவரது பேத்தியிடம் ஒப்படைத்தனர்.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த வாஜ்பாயியின் வளர்ப்பு மகளான நமிதா கௌல் பட்டாச்சாரியாவின் மகள் நிஹாரிகாவிடம் தேசியக் கொடி ஒப்படைக்கப்பட்டது.

அரசு மரியாதையுடன் வாஜ்பாயியின் உடல் தகனம் நடைபெறுகிறது.

முன்னதாக இறுதிச் சடங்கு நடைபெறும் ஸ்மிருதி ஸ்தல்லில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இறுதி மரியாதை செலுத்தினார். பிறகு பிரதமர் நரேந்திர மோடி தங்கள் கட்சியின் மூத்தத் தலைவருக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT