கேரள மாநிலத்தில் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்றும் 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கூறியிருப்பதாவது, கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், காசர்கோட் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.