கோப்புப்படம் 
இந்தியா

மீட்புப் பணிக்கு மீனவர்கள்: கேரள போலீஸார் ஏற்பாடு 

கேரளாவின் திரிச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு மீட்புப் பணிக்காக 32 மீனவர்கள் போலீஸாருடன் செல்கின்றனர். 

ENS

கேரளாவின் திரிச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு மீட்புப் பணிக்காக 32 மீனவர்கள் போலீஸாருடன் செல்கின்றனர். 

கேரள மாநிலம் கடந்த 100 ஆண்டுகளில் காணாத மிகப் பெரிய வெள்ள சேதத்தை கடந்த 10 நாட்களாக எதிர்கொண்டு வருகிறது. கேரள மாநிலத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, மழையின் தீவிரமும் குறைந்ததால் மீட்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் துரிதப்படுத்தப்பட்டது. 

இந்த வெள்ளத்தால் மூணாறு, ஆலுவா, கொச்சி, சாலக்குடி, செங்கணூர் என குறிப்பிட்ட பல இடங்கள் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்தன. இதில், சாலக்குடி பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு 32 மீனவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு போலீஸாருடன் சென்றுள்ளனர். 

நன்கு நீச்சல் அறிந்த நீச்சலில் நிபுணத்துவம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் இந்த 32 இளம் மீனவர்கள் போலீஸாரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அஜ்ஜனூர், மீனப்பீஸ், கன்ஹன்காட் மற்றும் பஞ்சவி கடப்புரம் உள்ளிட்ட கடலோரப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆவர். இவர்கள், நீச்சலில் மட்டும் இன்றி இயந்திர படகுகளையும் திறம்பட கையாளத் தெரிந்திருப்பவர்களாக இருப்பதால் கண்ணூர் தலைமை காவலர் இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். இந்த மீனவர்கள் போலீஸார் வாகனத்தில் சாலக்குடிக்கு சென்றுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT