புது தில்லி: மறைந்த சட்ட மேதை அம்பேத்கரின் 62-ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.
இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையின் தலைவரும், சட்ட மாமேதையுமான அம்பேத்கரின் 62-ஆவது நினைவு தினம் வியாழனன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களும் க லந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.