இந்தியா

கேரளாவில் 4-ஆவது சர்வதேச விமான நிலையம்: கண்ணூரில் இன்று திறப்பு

கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைத்தனர். 

ENS


கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைத்தனர். 

கேரளாவில் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இதையடுத்து, கண்ணூர் மாவட்டத்தில் ரூ.1800 கோடி மதிப்பிலான செலவில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையம் இன்று திறக்கப்பட்டது. முதல் விமான சேவையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் கண்ணூர் - அபுதாபி இடையிலான சேவை கொடியசைத்து துவக்கப்பட்டது.    

இதன் மூலம், இந்தியாவில் 4 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது. 

இந்த திறப்பு விழாவில், தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், கண்ணூர் சர்வதேச விமான நிலையம் மேலான்மை இயக்குநர் துளசிதாஸ், அமைச்சர்கள் ராமச்சந்திரன் கடன்னப்பள்ளி, சந்திரசேகரன், ஷைலஜா, சசீந்திரன் மற்றும் எம்பிக்கள் ஸ்ரீமதி, ராகேஷ் ஆகியோரும் பங்கேற்றனர். 

இதைத்தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் உரையாற்றினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT