முகப்பு
இந்தியா

தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜிநாமா செய்கிறேன்: உர்ஜித் படேல்

எனது தனிப்பட்ட காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்கிறேன் என்று உர்ஜித் படேல் தெரிவித்தார்.

Updated On : 10 டிசம்பர், 2018 at 7:58 PM
பகிர்:

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

எனது தனிப்பட்ட காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்கிறேன். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்பட்டதற்கு பெருமை கொள்கிறேன்.

கடந்த சில வருடங்களாக வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள கணிசமான சாதனைகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் உள்ளிட்டவை முக்கியப் பங்காற்றியுள்ளன. 

Advertisement

இந்த வாய்ப்பை பயன்படுத்தி எனது சக ஊழியர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்கு நன்றியும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.