முகப்பு
இந்தியா

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜிநாமா?

ரிசர்வ் வங்கி துணை ஆளுநரும் தனது பதவியை ராஜிநாமா செய்ததாக செய்திகள் பரவத் தொடங்கின. 

Updated On : 10 டிசம்பர், 2018 at 8:31 PM
பகிர்:

ரிசர்வ் வங்கி துணை ஆளுநரும் தனது பதவியை ராஜிநாமா செய்ததாக செய்திகள் பரவத் தொடங்கின. 

ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உர்ஜித் படேல் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை உடனடியாக ராஜிநாமா செய்கிறேன். இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்பட்டதற்கு பெருமை கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியாவும் ராஜிநாமா செய்ததாக செய்திகள் பரவின. ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. ஊடகங்களில் பரவிய இந்தச் செய்தி முற்றிலும் தவறானது என்று ரிசர்வ் வங்கி செய்தித் தொடர்பாளர் உறுதிபடத் தெரிவித்தார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.