இந்தியா

கர்நாடகாவில் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 6 பேர் பலி: 5 பேர் காயம்

கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டம், முதோல் என்ற இடத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் ஆலையில் பணியில் இருந்த 6

DIN

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டம், முதோல் என்ற இடத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் ஆலையில் பணியில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்துள்ளனர். 

கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டம், முதோல் என்ற இடத்தில் உள்ள நிரானி என்ற சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், இன்று காலை திடீரென கொதிகலன் வெடித்து விபத்திற்குள்ளானது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சர்க்கரை ஆலை முன்னாள் அமைச்சர் முர்கேஷ் நிரானிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT