முகப்பு
இந்தியா

அமெரிக்கர்களை மிரட்டி மோசடி செய்த போலி கால்சென்டர் கண்டுபிடிப்பு: 126 ஊழியர்கள் கைது 

அமெரிக்க குடிமக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில், நொய்டாவில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டரில் விசாரணை நடத்திய போலீஸார் அங்கு பணியாற்றிய 126 பேரை கைது செய்தனர்.

இந்தியா

அமெரிக்கர்களை மிரட்டி மோசடி செய்த போலி கால்சென்டர் கண்டுபிடிப்பு: 126 ஊழியர்கள் கைது 

அமெரிக்க குடிமக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில், நொய்டாவில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டரில் விசாரணை நடத்திய போலீஸார் அங்கு பணியாற்றிய 126 பேரை கைது செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:57 PM
பகிர்:

அமெரிக்க குடிமக்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்டதாக வந்த புகாரின்பேரில், நொய்டாவில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டரில் விசாரணை நடத்திய போலீஸார் அங்கு பணியாற்றிய 126 பேரை கைது செய்தனர்.

இது குறித்து நொய்டா முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அஜய் பால் சர்மா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

நொய்டாவில் உள்ள செக்டார் 63-இல் செயல்பட்டு வந்த கால் சென்டரில் இருந்து மோசடியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கால் சென்டரில் வியாழக்கிழமை இரவு சோதனை நடத்தப்பட்டது. 

அங்கு பணியில் இருந்த ஆப்பரேட்டர்கள், அழைப்பாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அமெரிக்க அரசால் வழங்கப்பட்டுள்ள 9 இலக்கம் கொண்ட சமூக பாதுகாப்பு எண்களில் பிரச்னை இருப்பதாக மிரட்டி, அதைச் சரி செய்ய பணம் கேட்டுள்ளது தெரியவந்தது. 

இதையடுத்து, அங்கு பணியாற்றிய 126 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களாக நொய்டாவில் 12 போலி கால் சென்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்கர்கள், கனடா நாட்டினர் உள்பட வெளிநாட்டினரை மோசடி செய்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அந்த அதிகாரி.

முழு கட்டுரையைப் படிக்க →