இந்தியா

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் விபத்து: 5 பேர் பலி

தினமணி

கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் சாஹர் புஷாகன் என்ற கப்பலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்ட போது டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியானதாகவும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் மற்றும் போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT