முகப்பு
இந்தியா

2 ஜி வழக்கு: விடுவிக்ககோரி மூத்த வழக்குரைஞர் மனு

நாடுமுழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராவதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மூத்த வழக்குரைஞர் ஆனந்த்

இந்தியா

2 ஜி வழக்கு: விடுவிக்ககோரி மூத்த வழக்குரைஞர் மனு

நாடுமுழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராவதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மூத்த வழக்குரைஞர் ஆனந்த்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

நாடுமுழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராவதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்குகளில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞராக கடந்த 2014-ஆம் ஆண்டு ஆனந்த் குரோவர் நியமிக்கப்பட்டார். இவரது பெயரை அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில், 2ஜி வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராவதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை ஆனந்த் குரோவர் அணுகியுள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 2 ஜி வழக்கில் அண்மையில் தீர்ப்பு வெளியானது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக சிறப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் பயிற்சி துறை கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்தது. எனவே, என்னை அனைத்து 2ஜி வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →