இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு: மார்ச் 6-ஆம் தேதி விசாரணை

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத் துறையின் நடவடிக்கையை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம், வரும் மார்ச் 6-ஆம் தேதி விசாரிக்க உள்ளது.
எனினும், அவருக்கு எதிராக அமலாக்கத் துறை பிறப்பித்துள்ள அழைப்பாணைகளுக்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவா ராய், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில், அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை எதிர்த்து சரியான முறையில் மனு தாக்கல் செய்வதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை, வரும் 6-ஆம் தேதி விசாரிப்பதற்கு ஒப்புக் கொண்டனர்.
கடந்த 2007-ஆம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேடுக்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உடந்தையாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 
காவல் நீட்டிப்பு: இதனிடையே, ஐஎன்எஸ் மீடியாவின் கருப்புப் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனின் அமலாக்கத் துறையின்காவல் மேலும் 3 நாள்களுக்கு நீடித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT