முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் 3 கோடி போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்க உதவிய ஆதார்: மத்திய அரசு

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த சுமார் 3 கோடி ரேஷன் அட்டைகளை ஒழிக்க ஆதார் அட்டைதான் உதவியது என்று மத்திய நுகர்வோர் நலன் துறை இணை அமைச்சர் சி.ஆர். சௌதாரி கூறியுள்ளார்.

Updated On : 26 பிப்ரவரி, 2018 at 6:05 PM
பகிர்:


ஹைதராபாத்: நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த சுமார் 3 கோடி ரேஷன் அட்டைகளை ஒழிக்க ஆதார் அட்டைதான் உதவியது என்று மத்திய நுகர்வோர் நலன் துறை இணை அமைச்சர் சி.ஆர். சௌதாரி கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த போலி அட்டைகளுக்காக செலவிடப்பட்டு வந்த ரூ.17 ஆயிரம் கோடி ரூபாயும் இந்த நடவடிக்கையால் சேமிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முடிவை மத்திய அரசு எடுத்ததால், இந்த நன்மைகள் கிடைத்ததாகவும், நாட்டில் மொத்தமுள்ள 23 கோடி ரேஷன் அட்டையில் 82 சதவீத அட்டைகள் அதாவது 19 கோடி அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

ஆதார் அட்டை மூலமாக, மானிய விலையில் கிடைக்கும் உணவு பொருட்கள் சரியான நபர்களுக்கு மட்டும் சென்று சேர்வது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.