இந்தியா

இந்திய ராணுவம் பதிலடி: பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 6 பேர் பலி

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

PTI


பூஞ்ச்: இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ உதவி செய்து வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தியது.

இது குறித்து இந்திய ராணுவம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, இந்திய எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி வருகிறது. அந்நாட்டுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காக இந்திய ராணுவம் இன்று தாக்குதலை நடத்தியது.

பாகிஸ்தானின் எதிர் தாக்குதலை எதிர்கொள்ள எந்த நேரத்திலும் இந்திய ராணுவம் தயார் நிலையிலேயே உள்ளது. பாகிஸ்தானில் அத்துமீறல் தொடர்ந்தால் இந்திய ராணுவம் அடுத்த அதிரடி நடவடிக்கையை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!

வடிவேலுக்கு வராத கூட்டமா விஜய்க்கு வந்துவிட்டது?: டி.கே.எஸ்.இளங்கோவன்

நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!

திருநெல்வேலி, விருதுநகா், ஈரோட்டில் டைடல் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் 'நீதித் துறையில் ஊழல்': மன்னிப்பு கோரியது என்சிஇஆா்டி

SCROLL FOR NEXT