மும்பை கனமழை எதிரொலி: மாநகராட்சி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சனம்
மும்பையில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு மாநகராட்சி தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
மும்பையில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு மாநகராட்சி தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்தேரி மேற்கில் அமைந்துள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாலங்கள் விழுகிறது. இதில் மாநகராட்சியும் சேர்ந்து வீழ்ந்துள்ளது. மும்பை மக்களின் மீது தான் எனது கவனம் உள்ளது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதில், மஹாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு மற்றும் மும்பை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக அவர் இப்பதிவை வெளியிட்டுள்ளார்.
Advertisement