சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது மிளகாய் பொடித் தூவிய கும்பலின் சதி முறியடிப்பு
சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயன்ற கும்பலின் சதிச் செயல் முறியடிக்கப்பட்டது.
ஸ்ரீநகர்: சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயன்ற கும்பலின் சதிச் செயல் முறியடிக்கப்பட்டது.
ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஹும்ஹமா என்ற பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறிக்க சதித் திட்டம் தீட்டிய 3 பேர் கொண்ட கும்பல், அவர்கள் மீது மிளகாய்ப் பொடியைத் தூவினர்.
எனினும், ஆயுதங்களை பாதுகாப்பதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தீரத்துடன் செயல்பட்டதால், தங்கள் திட்டம் பலிக்காது என்று அறிந்த சமூக விரோத கும்பல், அங்கிருந்து தப்பியோடியது.
Advertisement