முகப்பு
இந்தியா

ராகுலை விமர்சித்த கட்சித் தலைவரின் பதவிக்கு 'கல்தா' கொடுத்த மாயாவதி 

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த தனது கட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Updated On : 17 ஜூலை 2018, 2:12 pm IST
பகிர்:

புது தில்லி:   காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த தனது கட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெயப்ரகாஷ் சிங். சமீபத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் இல்லை என்று விமர்சித்திருந்தார்.     

இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த ஜெய் பிரகாஷ் சிங்கை பதவி நீக்கம் செய்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக தில்லியில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான ஜெயப்ரகாஷ் சிங், கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக, எதிர்கட்சித் தலைவர்கள் குறித்த தனி நபர் தாக்குதலில் பேசியது பற்றித் தகவல் அறிந்தேன். அது அவரது தனிப்பட்ட கருத்து. எனவே அவர் உடனடியாக கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நமது கட்சி உறுப்பினர்கள் இனி கட்சிக் கொள்கைகள் குறித்தும் நமது மகத்தான தலைவர்கள் குறித்து  மட்டுமே பேசுவது நல்லது. அதேபோல கட்சியின் தேர்தல் கூட்டணிகள் குறித்து தலைமையே முடிவெடுக்கும். இதைப் பற்றியும் எதுவும் கருத்துக்கள் கூறுவதனைத் தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments