இந்தியா

ஈரானில் வாடும் 21 தமிழர்களை மீட்க சுஷ்மாவிடம் கனிமொழி வலியுறுத்தல்

DNS

ஈரானில் வாடும் 21 தமிழர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுஷ்மா ஸ்வராஜிடம் கனிமொழி வலியுறுத்தினார்.  

தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேர் மீனவர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக தெரிகிறது. 

இதுதொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் மனு அளித்தார். அந்த மனுவில், 

"தமிழகத்தின் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 பேர் ஈரானில் கடந்த 6 மாதங்களாக மீனவர்களாக வேலை செய்து வருகின்றனர். அவர்கள் அங்கு ஊதியம் தராமல் மோசமாக நடத்தப்படுவதாகவும், அவர்களின் உரிமையாளர் அவர்களின் அடையாள அட்டைகள், கடவுச் சீட்டுகள் ஆகியவற்றை திருப்பித் தராமல் வைத்திருப்பதாகவும் தெரிய வருகிறது. 

ஆகவே, அந்த மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கு தங்களது அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT