தில்லியில் 3 சகோதரிகள் மர்ம மரணம்: தந்தை தலைமறைவு
தில்லியின் மாண்டேவாலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகள் மர்மமான முறையில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புது தில்லி: தில்லியின் மாண்டேவாலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகள் மர்மமான முறையில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த 3 சகோதரிகளுக்கும் முறையே, இரண்டு, நான்கு மற்றும் எட்டு வயது இருக்கும். இவர்கள் நேற்று இரவு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
குழந்தைகளை அவரது தாயும், அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் நள்ளிரவு 1 மணியளவில் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அவர்கள் உடலில் எந்த காயமும் இல்லாததால் அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது.
ஆனால், அவர்களது வீட்டில் இருந்து சில மருந்து பாட்டில்களைக் கண்டெடுத்த காவல்துறையினர், குழந்தைகளின் தந்தை தலைமறைவானதை அடுத்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.