இந்தியா

ஆம்புலன்ஸ் சேவைக்காக கர்பிணி பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம்: ஆந்திர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஆந்திராவில் ஆம்புலன்ஸ் சேவைக்காக 12 கி.மீ வரை கர்பிணி பெண்ணை தூக்கிச் சென்று, குழந்தை இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ENS

ஆந்திராவில் ஆம்புலன்ஸ் சேவைக்காக 12 கி.மீ வரை கர்பிணி பெண்ணை தூக்கிச் சென்று, குழந்தை இறந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, ஜிந்தம்மா என்ற இளம்பெண் செவ்வாய்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் அளவுக்கு போதிய வசதி கிடையாது. 

அதனால், ஆம்புலன்ஸ் சேவைக்காக 12 கி.மீ தூரம் அந்த பெண் மூங்கில் மற்றும் துணியின் உதவியால் மலைப்பாதை வழியாக தூக்கிச் செல்லப்பட்டார். அந்த பெண் பாதி வழியிலேயே குழந்தையை ஈன்றார். ஆனால், பிறந்த குழந்தை துரதிருஷ்டவசமாக உயிரிழந்தது. 

ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துவதற்காக 12 கிமீ தூரம் வரை கர்பிணி பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் இதுதொடர்பாக விரிவான அறிக்கையை 4 வார காலத்துக்குள் சமர்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், கடந்த ஒரு ஆண்டில் இதுபோன்ற சம்பவங்கள் குறித்தான தகவலையும் இணைத்து சமர்பிக்குமாறு மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!

தமிழ்நாடுதான் விஜய்! விஜய்தான் தமிழ்நாடு! - Vijay

AC பேருந்து நிறுத்தம்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT