இடி, மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்
உத்தரப் பிரதேசத்தில் இடி, மின்னல் தாக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி இடி, மின்னல் தாக்கி 15 பேர் வரை உயிரிழந்தனர். மேலும், 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் மொராதாபாத், முஸாபர்நகர், மீரட், அம்ரோஹா மற்றும் சாம்பல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மரங்கள், மின் கம்பங்கள் பல இடங்களில் சரிந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.