முகப்பு
இந்தியா

நிறத்தை விமர்சித்ததால் விசேஷத்தில் விஷம் வைத்த பெண்: 5 பேர் பலி, 120 பேர் கவலைக்கிடம்

தனது நிறத்தை விமர்சித்ததால் உறவினரின் புதுமனை விசேஷத்தின் விருத்தில் பெண் ஒருவர் வைத்த விஷத்தால் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 23 ஜூன், 2018 at 6:04 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:32 PM

தனது நிறத்தை விமர்சித்ததால் உறவினரின் புதுமனை விசேஷத்தின் விருத்தில் பெண் ஒருவர் வைத்த விஷத்தால் குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிரத்தில் உள்ள ராய்கட் மாவடத்தின் மஹத் எனும் கிராமத்தில் வசிக்கும் பிரக்யா சுர்வாஸி என்ற பெண், தனது நிறம் குறித்து விமர்சித்ததால் அவரது உறவினரின் புதுமனை புகுவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் பூச்சி மருந்து கலந்துள்ளார்.

சுபாஷ் மனே என்பவரின் வீட்டு விசேஷத்துக்கு வந்தவர்களில் அந்த விஷம் கலந்த உணவை உண்ட சம்பவத்தில் 4 குழந்தைகள் மற்றும் ஒரு முதியவர் என 5 பேர் உயிரிழந்தனர். 120 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

ஜூன் 18-ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ராய்கட் காவல்நிலைய எஸ்.பி. அனில் பரஸ்கார் மேற்கொண்ட விசாரணையில் பூச்சி மருந்து கலந்ததாக சம்பந்தப்பட்ட பெண் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.