தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்
தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். ஊடகம் தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
பின்னர் அவர் தில்லி பாட்டியாலா வளாகத்தில் உள்ள பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார்.
ஒருநாள் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.