இந்தியா

3 மாநில வாக்கு எண்ணிக்கை: பாஜக தொடர்ந்து முன்னிலை

திரிபுரா, மேகாலாயா, நாகாலாந்து ஆகிய 3 மாநில வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

Raghavendran

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (மார்ச் 3) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 59 தொகுதிகளைக் கொண்ட திரிபராவில் பிப்ரவரி 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 92 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு பாஜக மற்றும் ஐபிஎஃப்டி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. 25 ஆண்டுகளாக மாணிக் சர்கார் தலைமையில் ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இங்கு போட்டியிட்டன. இதில் பாஜக கூட்டணி 39 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 20 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.

மொத்தம் 60 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேகாலயாவில் 59 இடங்களுக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றன. இதில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இங்கு 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸுடன், பாஜக மற்றும் என்பிபி கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. இதில் ஆளும் காங்கிரஸ் 23 இடங்களிலும், பாஜக கூட்டணி 15 இடங்களிலும், மற்றவை 21 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன.

மொத்தம் 60 இடங்களைக் கொண்ட நாகாலந்து பேரவைக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கு பாஜக, என்டிபிபி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன. காங்கிரஸ், என்பிஎஃப் உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. இதில் 30 இடங்களில் பாஜக கூட்டணியும், 29 இடங்களில் என்பிஎஃப் கட்சியும், ஒரு இடத்தில் மற்றவையும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT