சிபிஎஸ்இ வினாத்தான் வெளியான விவகாரம்: டியூஷன் பயிற்சியாளரிடம் விசாரணை
சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சந்தேகப்படும் டியூஷன் பயிற்சியாளரிடம் தில்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது தில்லி: சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சந்தேகப்படும் டியூஷன் பயிற்சியாளரிடம் தில்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்2 பொருளாதாரம் மற்றும் 10ம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான விவகாரம் தொடர்பாக இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், முக்கியக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் டியூஷன் பயிற்சியாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் கணக்கு மற்றும் பொருளாதாரப் பாடங்களுக்கு வகுப்பெடுத்து வருகிறார்.
Advertisement
விசாரணை முதற்கட்டத்தில் இருப்பதால், இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து கூற இயலாது. இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. டியூஷன் பயிற்சியாளர்களுக்கு முன்கூட்டியே வினாத்தாள் வந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்று விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.
வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக தில்லியில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகளும் நடைபெற்றுள்ளன.