இந்தியா

புழுதிப் புயலுடன் கனமழை: தில்லியில் விமானம் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு 

DIN

புதுதில்லி: புழுதிப் புயலுடன் பெய்த கனமழையின் காரணமாக தில்லியில் விமானம் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இடியுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. தற்பொழுது தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புழுதி புயலுடன் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல ஸ்ரீநகர்-தில்லி இடையிலான தனியார் விமானம் ஒன்று இதன் காரணமாக அமிர்தசரஸ் நகருக்கு திருப்பிவிடப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மெட்ரோ ரெயில் சேவையிலும் பாதிப்பு நேரிட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT