முகப்பு
இந்தியா

ரவீந்திர ஜடேஜா மனைவி மீது போலீஸ் கான்ஸ்டபிள் தாக்குதல்

குஜராத் போலீஸ் கான்ஸ்டபிள் ரவீந்திர ஜடேஜா மனைவி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 22 மே, 2018 at 8:06 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:36 PM

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது மனைவி ரீவா சொலாங்கி மீது குஜராத் போவீஸ் கான்ஸ்டபிள் திங்கள்கிழமை தாக்கியுள்ளார்.

ரீவா சொலாங்கி தனது பிஎம்டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்த போது திங்கள்கிழமை மாலை 5:30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் ரீவா மீது எந்த தவறும் இல்லாத நிலையிலும் அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த போலீஸ் கான்ஸ்டபிள் தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் எதிர்மார்கமாக வந்தபோது ரீவா காரின் மீது மோதியுள்ளார். அச்சமயம் அவரை காப்பாற்ற காரில் இருந்து ரீவா இறங்கியபோது, ஆத்திரமடைந்த கான்ஸ்டபிள் தாக்கியுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ரீவாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

உடனடியாக அப்பகுதி காவல்துறை அதிகாரி பிரதீப் சேஜூல், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். மேலும் ரீவா சொலாங்கியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். பின்னர் அந்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை கான்ஸ்டபிள் தாக்கியது உண்மைதான். சஞ்சய் குராங்கியா என்ற அந்த காவலர் ஜாம்நகர் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது எதிர்பாரா விதமாக இரு வாகனங்களும் மோதியுள்ளன. பின்னர் இச்சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ரீவா அளித்த புகாரின் பேரில் அந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.