முகப்பு
இந்தியா

தில்லியில் காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டது

தில்லியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.

Updated On : 10 நவம்பர், 2018 at 1:35 PM
தில்லி, விஜய் சௌக் பகுதியில் திங்கள்கிழமை நிலவிய புகை மூட்டம்.
பகிர்:


புது தில்லி: தில்லியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால், நேற்றைய நிலையை விட இன்று காலை நிலவரப்படி, தில்லியின் காற்றின் தரம் மிக மோசம் (very poor) என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தில்லியில் 15 பகுதிகளில் படுமோசம் என்ற நிலையிலும், 19 பகுதிகளிலும் மிக மோசம் என்ற நிலையிலும் காற்றின் தரம் உள்ளது.

Advertisement

தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிக மிக மோசமடைந்து, தில்லி வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கனரக வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் படிப்படியாக காற்றின் தரம் மீண்டும் மிக மோசம் என்ற நிலைக்கு திரும்பி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.