முகப்பு
இந்தியா

தில்லியில் காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டது

தில்லியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:16 PM
தில்லி, விஜய் சௌக் பகுதியில் திங்கள்கிழமை நிலவிய புகை மூட்டம்.
பகிர்:


புது தில்லி: தில்லியில் சனிக்கிழமை காலை நிலவரப்படி காற்றின் தரம் மிக மோசம் என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால், நேற்றைய நிலையை விட இன்று காலை நிலவரப்படி, தில்லியின் காற்றின் தரம் மிக மோசம் (very poor) என்ற நிலைக்கு மேம்பட்டுள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தில்லியில் 15 பகுதிகளில் படுமோசம் என்ற நிலையிலும், 19 பகுதிகளிலும் மிக மோசம் என்ற நிலையிலும் காற்றின் தரம் உள்ளது.

தீபாவளிக்குப் பிறகு காற்றின் தரம் மிக மிக மோசமடைந்து, தில்லி வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கனரக வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் படிப்படியாக காற்றின் தரம் மீண்டும் மிக மோசம் என்ற நிலைக்கு திரும்பி வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →