இந்தியா

திட்டமிட்டப்படி நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மாக்-3!

DIN

புதுதில்லி: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை மறுநாள் (நவ.14) மாலை 5.08 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

கஜா புயலால் கடலூர் - ஸ்ரீகரிகோட்டா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து, மாக்-3 ராக்கெட் ஏவப்படாது என செய்திகள் வெளியானது. 

இந்நிலையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டப்படி நாளை மறுநாள் (நவ.14) மாலை 5.08 விண்ணில் ஏவப்படும். 3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ, மாக் 3 எடுத்துச் செல்ல இருப்பதாகவும் இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் இந்திய சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT