இந்தியா

மகாராஷ்டிராவில் ராணுவ குடோனில் குண்டு வெடித்து 6 பேர் பலி; 10 பேர் காயம்

PTI


மகாராஷ்டிர மாநிலம் வர்தாவில் உள்ள ராணுவ குடோனில் இன்று காலை மிகப் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. 

புல்கானில் உள்ள மத்திய ராணுவ வெடிபொருள் கிடங்கில் நடந்த இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பழைய வெடிக்காத குண்டுகளை மண்ணில் புதைத்து செயலிழக்கச் செய்யும் போது இன்று காலை 7.10 மணியளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது என்றும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT