முகப்பு
இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் நாடிகாம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஸ்ரீநகரில் இருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள சோபியான் மாவட்டம் நாடிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர், மாநில போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர். 

தொடர்ந்து அந்த பகுதியில், பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →