முகப்பு
இந்தியா

வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக அபிஜித் போஸ் நியமனம்

எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக இருந்து வந்த அபிஜித் போஸ் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமனம்

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக இருந்து வந்த அபிஜித் போஸ் வாட்ஸ்-அப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களின் ஊடகமாக திகழும் 'வாட்ஸ்-அப்' செயலியை உலகம் முழுவதும் 130 கோடி வாடிக்கையார்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், சுமார் 20 கோடி பேர் இந்தியர்கள் ஆவர். 

வாட்ஸ்-ஆப் மூலம் பகிரப்படும் சில தவறான செய்திகளால் வட மாநிலங்களில் வன்முறை நடப்பது தொடர் கதையாகி வருவதை அடுத்து தனது சேவையில் தவறான தகவலைப் பரவலாக்குவதைத் தடுக்க வாட்ஸ்-அப் நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் அதிகாரி ஒருவரை வாட்ஸ்-அப் நிறுவனம் சமீபத்தில் நியமித்தது.

இந்நிலையில், பிரபல மின்னணு பணப்பரிமாற்ற செயலியான எஸ்டாப் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வரும் அபிஜித் போஸ் என்பவர் வாட்ஸ்-ஆப் நிறுவனத்தின் இந்திய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →